Select Page

Slide அது குழந்தை பெறுவது குறித்தது மட்டுமல்ல. ஒரு நபரின் முழுமையான உடல், உள மற்றும் சமூக நல்வாழ்வு குறித்தே இனப்பெருக்க சுகாதாரம் கற்பிக்கின்றது. தெரியுமா? முதலாவது அது ஒரு மனித உரிமையாகும்

01 | பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரக் கல்வி

Slide இனப்பெருக்க சுகாதாரம் என்றால் என்ன? இனப்பெருக்க சுகாதாரம் என்பது, எமது இனப்பெருக்க தொகுதி மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாப்பாய் இருப்பது மட்டுமல்ல அது எமது முழுமையான உடல், உள மற்றும் சமூக நல்வாழ்வுடன் தொடர்புடையதாகும்.

எமது வாழ்வின் எல்லா கட்டங்களிலும், இனப்பெருக்க தொகுதி, அதன் செயற்பாடு மற்றும் பயன்பாடு முக்கியமானதாகும். அதனால் இனப்பெருக்க சுகாதாரம் என்பது, ஒருவர் பொறுப்புடனான, திருப்திகரமான மற்றும் பாதுகாப்பான பாலியல் வாழ்வை வாழக்கூடியதாக இருத்தல், ஒரு குழந்தையை பெற்றுக்கொள்வதற்கான திறன் மட்டுமல்லாது அதனை எப்போது பெறுவது, எத்தனை பிள்ளைகள் பெறுவது, போன்றவற்றை தீர்மானிப்பதற்கான சுதந்திரத்தை பெற்றிருத்தல் என்பவையாகும்.

விரைவில் மாறி வரும் இந்த நவீன உலகில் வாழ்பவர்கள் வெவ்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்கின்றனர். இந்த சவால்களில் அதிகமானவை அபிவிருத்தி அல்லது வளர்ச்சி மற்றும் நபர்களுக்கிடையேயான உறவுகளுடன் தொடர்புடையதாகும். ஆய்வுகளின் மூலம் பெறப்பட்ட தகவல்களுக்கமைய, பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் குறித்த தகவல்களை அறிந்திருந்த இளைஞர்கள் தம் முதல் பாலியல் உறவினை தாமதித்துள்ளனர். அவ்வாறே அவர்கள் பாலியல் உறவின் போது பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொண்டம் (ஆணுறையை) பாவித்துள்ளனர்.

இலங்கையில் 6.5 மில்லியன் இளைஞர்கள் உள்ளனர். அதில் கட்டிளமைப்பருவத்தினர் 3.8 மில்லியனாக காணப்படுகின்றனர். அது இலங்கையின் குடித்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியாகும். கட்டிளமைப்பருவத்தினருள் சுமார் 70%மானோர் பாடசாலை செல்கின்றனர். அவ்வாறெனில் அவர்கள் அதிகமாக சமூகத்துடன் தொடர்புகளை கொண்டுள்ளனர். இந்தப் பிள்ளைகளுக்கு சரியான பாலியல் கல்வியை பெற்றுக்கொடுப்பது அவசியமாகின்றது. இவர்கள் சமூகம், நண்பர்கள் மற்றும் சம வயதினரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பிழையான தகவல்கள், கட்டுக்கதைகளை விடுத்து சரியான தகவல்கள் மற்றும் கல்வியை, பொருத்தமான முறையில் வழங்குவதற்கானதேவை காணப்படுகின்றது. இதன் மூலம் அவர்களால் எவ்வித சவால்களும் இன்றி பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளை சரியான முறையில் தீர்த்துக்கொள்ளக் கூடுமாக அமையும்.

Slide பாலியல் சுகாதாரம் என்றால் என்ன?
பாலியல் சுகாதாரம் என்றால், ஒருவரின் பாலியல்பு தொடர்பான, முழுமையான உடல், உணர்வு ரீதியான, உள மற்றும் சமூக நல்வாழ்வாகும்.

அது நோய்கள் இல்லாதிருத்தல், பாலியல் செயற்பாடின்மை, மற்றும் வேறு குறைபாடுகள் இல்லாதிருப்பது மட்டுமல்ல. பலவந்தப்படுத்தல், பாரபட்சம், மற்றும் வன்முறை இல்லாது இன்பகரமான மற்றும் பாதுகாப்பான பாலியல் வாழ்வை அனுபவிப்பதற்கான சுதந்திரமாகும்.

பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் குறித்து இளைஞர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் 80%மான இளைஞர்கள் மத்தியில் பாலியல் தொற்றுக்கள் குறித்த போதிய விழிப்புணர்வு காணப்படவில்லை. இது ஒரு பாரிய பிரச்சனையாகும். ஒரு வருடத்தில் சுமார் 40,000 இளவயது கற்பங்கள் இடம்பெறுகின்றன. நடைபெறும் கருக்கலைப்புகளில் சுமார் 20% இளம் பெண்களிடையே இடம்பெறுகின்றது. திட்டமிடாத கற்பங்களை தடுக்க அவர்கள் அறிந்திருந்தால், மேற்குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைகள் குறைவடைந்திக்கக்கூடும். பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் குறித்து இளைஞர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதற்கு இந்த தரவுகள் சான்று பகர்கின்றன.

02 | பூப்படைதல்

Slide ஆண் பிள்ளைகள் பூப்படையும் போது, உடல் ரீதியான மாற்றங்கள் பல இடம்பெறுகின்றன. வேகமான உடல் வளர்ச்சி, தசைகள் வளருதல், குரல் மாற்றம் அடைதல், முகப்பருக்கள் ஏற்படுத்தல். ஆண்களின் விந்தணுக்கள் உற்பத்தியாக ஆரம்பிக்கும். அத்துடன் அவர்களின் மார்பு மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் உரோமம் வளர்ச்சியடையும் மற்றும் அவர்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறும். ஆண் பிள்ளைகளின் உளரீதியான மாற்றங்களும் கருத்தில்கொள்ளப்பட வேண்டும். அவர்கள் புதிய அனுபவங்களை பெற்றுக்கொள்ள ஆர்வம் காண்பிப்பார்கள். தம் நடை உடை பாவனைகளை மாற்ற ஆரம்பிப்பார்கள். உடல் மற்றும் உள மாற்றங்களுக்கிடையில் இவர்கள் சிக்கிக்கொள்வதை காணக்கூடியதாக அமையும். பாலியல் உணர்வுகள் மற்றும் அது குறித்து தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் ஏற்படும். போட்டி மனப்பான்மை மூலம் சம வயது குழுக்களிடையே அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள்.

பெண் பிள்ளைகளில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள்: ஆண்பிள்ளைகளுக்கு முன்னரே அவர்களின் வளர்ச்சி ஆரம்பித்து விடும், உடல் வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் ஏற்படுவதே பிரதானமானது. மார்பகங்கள் வளர மற்றும் இடுப்புப் பகுதி விரிவடைய ஆரம்பிக்கும். முகப்பருக்கள் ஏற்படும். பிறப்புறுப்பு பகுதிகளில் மற்றும் அக்குள் பகுதியில் உரோமம் வளரும். மாதவிடாய் ஆரம்பிக்கும்.
பெண் பிள்ளைகளில் ஏற்படும் உள ரீதியான மாற்றங்கள்: புது அனுபவங்களை பெற்றுக்கொள்ள விரும்புதல் மற்றும் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் முதலிடம் கொடுக்க ஆரம்பிப்பார்கள். உள ரீதியான மற்றும் உடல் ரீதியான மாற்றங்களுக்கிடையில் சிக்கிக்கொள்ளும் நிலையை அவர்களில் அவதானிக்கலாம். தம் உடல் தோற்றம் குறித்து அதிக கரிசனை காண்பிப்பார்கள். சமவயது குழுக்களுடனான தொடர்புகளை வளர்த்துக்கொள்வது மற்றும் அக்குழுக்களில் தமக்கான அங்கீகாரத்தை நாட விரும்புவார்கள்.
பூப்படைதல் என்றால் என்ன? ஒரு பெண் அல்லது ஆண் பிள்ளையின் உடல் விருத்தியடைந்து 09 - 10 வயதை அடையும் காலப்பகுதியில் அவர்களின் மூளையின் பிட்யூட்டரி சுரப்பியில் உற்பத்தியாகும் ஹோர்மோன்கள், பெண் பிள்ளையாக இருப்பின் முட்டைகள் விருத்தியடையவும், அது ஆண் பிள்ளையாக இருப்பின் விந்து உற்பத்தி செய்யவும் வழிவகுக்கின்றது. இந்த ஹோர்மோன் உற்பத்தியாகும் செயற்பாட்டின் மூலம் பூப்படைதல் நடைபெறுகின்றது. அத்துடன் அவர்களின் உடல் வயது வந்த ஒருவரின் உடலுக்கு தேவையான வளர்ச்சியை அடைய ஆரம்பித்து, அவர்களின் பாலியல் உறுப்புக்கள் மற்றும் பாலியல் திறன்கள் வளர்ச்சியடைகின்றது.

03 | கட்டிளமைப்பருவம்

Slide அத்துடன் இப்பருவத்தில் உணர்ச்சிவசமான தீர்மானங்களை உடனடியாக மேற்கொள்ளும் போக்கும் காணப்படும். இந்த உணர்ச்சிவசமான தீர்மானங்கள் குறித்து எளிய முறையில் கூறுவதாயின் "செயற்பட்ட பிறகே அந்த செயலை குறித்து அவர்கள் சிந்திப்பார்கள்".

காதல் உணர்வுகளை உணர ஆரம்பிப்பதும் இவ்வயதிலேயே. மேலும் ஒருவர் மீது ஏற்படும் ஆழமான உணர்வு மற்றும் விருப்பம் காரணமாக காதல் ஏற்படுகின்றது. உங்கள் மூலையில் சுரக்கும் இரசாயனங்களின் காரணமாக உங்கள் துணை அல்லது காதலருடன் இருக்கும் போது சந்தோஷம், ஈர்ப்பு மற்றும் காமம் போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன.
கட்டிளமைப்பருவம் என்றால் என்ன? 10 - 19 வயதிற்குட்பட்டவர்களை நாம் கட்டிளமைப்பருவத்தினர் என அழைக்கின்றோம். இந்தக்கால கட்டத்தில் இவர்கள் சுதந்திரமாக செயற்பட மற்றும் சம வயது நண்பர்களுக்கு அதிக கவனத்தையும் நேரத்தையும் வழங்க ஆரம்பிப்பார்கள். இந்த காலத்தில் அவர்கள் தாம் விரும்பும் நபர்கள் மீது ஈர்ப்பு கொள்ள ஆரம்பிக்கின்றனர், இதனால் இவர்கள் காதல் உறவுகளை ஆரம்பிக்கக்கூடும்.

இதன் காரணமாக அவர்கள் தம் ஆளுமை மற்றும் தனித்தன்மையை விருத்தி செய்யவும் தம் உடல் தோற்றம் போன்றவற்றில் கவனம் செலுத்தவும் முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

கட்டிளமைப் பருவத்தை அடைகையில், எம்மில் உளரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும் ஹோர்மோன்கள் சுரக்க ஆரம்பிப்பதனால் அவை உங்களில் உணர்வு ரீதியான மற்றும் உளரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும். பாலியல் குறித்து அறிந்து கொள்வதற்கான ஆவல், பாலியல் உணர்வுகள் மற்றும் விருப்பங்கள் மற்றும் ஒருவர் மீது ஈர்ப்பு அல்லது விருப்பம் போன்றவற்றை உணர ஆரம்பிப்பீர்கள். இவ்வாறான புதிய மற்றும் குழப்பான உணர்வுகள் எழுவதன் காரணமாக ஒரு உளரீதியான போராட்டத்திற்கு முகம்கொடுக்கும் ஒரு நிலை காணப்படும். இவ்வாறான உணர்வுகள் அனைத்தும் சாதாரணமானவை மற்றும் இயற்கையாய் நடைபெறுபவை என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

04 | பெண் இனப்பெருக்க தொகுதி

Slide பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதி என்றால் என்ன? ஒரு பெண்ணின் இனப்பெருக்க தொகுதியில், யோனி, பலோப்பியன் குழாய்கள், சூலகங்கள் மற்றும் கருப்பை போன்றவை உள்ளடங்கும். சூலகங்களில், சூழ் அல்லது முட்டையின் விருத்திக்கு பெண்ணின் உடலில் உற்பத்தியாகும் ஈஸ்ட்ரஜன் ஹோர்மோன்கள் பொறுப்பாகும். இந்த ஹோர்மோன்களே பூப்படைதல் காலங்களில் பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கான காரணம். இதனால் அவர்களின் உயரம் அதிகரித்தல், மார்பகங்கள் வளர்ச்சியடைதல், உடலின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தல் மற்றும் பாலுறுப்புகளை அண்மித்த பகுதியில் மற்றும் அக்குள் பகுதியில் உரோமம் வளர்தல் போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன.

Slide பெண்ணின் இனப்பெருக்க தொகுதியில் காணப்படும் உறுப்புகள் மற்றும் அதன் செயற்பாடுகள்.
பெண்ணின் இனப்பெருக்கத்தொகுதி மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து பார்ப்போம்: கருப்பையினுள் கரு உட்பதிக்கப்பட்டு அது அங்கு வளர்ச்சியடையும். இரு பக்கங்களிலும் காணப்படும் பலோப்பியன் குழாய்கள் சூழ் அல்லது முட்டையை கருப்பையிற்கு கொண்டு செல்ல உதவும் குழாய்களாகும். கருக்கட்டல், அதாவது விந்து முட்டையை சந்திப்பது பலோப்பியன் குழாய்களில் இடம்பெறும். கருப்பை கழுத்து கருப்பையின் இறுதியில் அமைந்துள்ளது, அது கருப்பையின் வாய் அல்லது அதன் திறப்பாகும். இது கருப்பைக்கும் யோனிவழிக்கும் இடையே அமைந்துள்ளது. யோனி வழி என்பது கருப்பையை உடலின் வெளிப்புறத்துடன் இணைக்கும் ஒரு குழாயாகும். பாலியல் உறவின் போது ஆணின் ஆண்குறி யோனிவழியினுள் செலுத்தப்படுகின்றது. குழந்தைப்பிறப்பின் போது குழந்தை வெளியேறுவதும் யோனி வழியினூடாகவே. பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியின் வெளிப்பகுதி யோனி என பொதுவாக அழைக்கப்படுகின்றது. பெண்குறி மூலம் யோனித் துவாரத்திற்கு சற்று மேல் அமைந்திருக்கும் ஒரு உறுப்பாகும். பெண்கள் இன்பத்தை உணர பாலியல் உறவின் போது திருப்பதியை உணர இந்த உறுப்பு உதவுகின்றது.

யோனித்திரவம் என்பது யோனிப்பகுதியில் ஈரத்தை ஏற்படுத்த யோனிவழியில் உள்ள சுரப்பிகளில் சுரக்கப்படும் திரவமாகும்.யோனியின் வெளிப்பகுதியான பெண்குறி வெளிமடல் யோனியை பாதுகாக்க உரோமங்களுடன் காணப்படுகின்றது. இது உட்பகுதியை பாதுகாக்கும் வெளிப்புற உறுப்பு. யோனித்துவாராம் பெண்குறி உள்மடலினால் பாதுகாக்கப்படுகின்றது.

எமது அடி வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் எம் இனப்பெருக்கத்தொகுதியை பாதுகாக்க அதை சுற்றிலும் எலும்புகள் அமைந்துள்ளன. சூல் அல்லது முட்டை மற்றும் பிரதான ஹோர்மோன்களான ஈஸ்ட்ரஜன் மற்றும் புரோஜெஸ்டரோன் உற்பத்தியாவது சூலகங்களிலாகும். சிறுநீர் வெளியேற யோனித்துவாரத்திற்கு மேல் சிறுநீர் துவாரம் காணப்படும். கன்னித்திரை என்பது யோனித்துவாரத்தினுள் அமைந்துள்ள மெல்லியதொரு திசுவாகும்.

Slide கன்னித்திரை பற்றி உங்களுக்குத்தெரியுமா? கன்னித்திரை என்பது பெண்ணின் உடலின் யோனிக்குழாயினுள் அமைந்திருக்கும் ஒரு மெல்லிய திரை போன்றதொரு திசுவாகும். மாதவிடாய் இரத்தம் வெளியேற கன்னித்திரையில் ஒரு சிறு துவாரம் காணப்படும். சில பெண்களுக்கு இயற்கையாகவே இந்த துவாரம் இல்லாது இருக்கலாம், அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு சிகிச்சையின் மூலம் இது சரி செய்யப்படலாம்.

கிட்டத்தட்ட 60% வீதமான பெண்களுக்கு முதலாவது பாலியல் உறவின் அனுபவத்தின் போது கன்னித்திரை கிழிந்து இரத்தம் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனினும் 40% வீதமான பெண்களுக்கு அவ்வாறு நடைபெறுவதில்லை. அவ்வாறே முதலாவது பாலியல் உறவின் போது இரத்தம் வெளியேறாதிருப்பது ஒருவரின் கன்னித்தன்மையை தீர்மானிக்காது.

உடலுறவின் போது கிழிந்த கன்னித்திரை அதன் பழைய நிலைக்கு மீண்டும் சரிசெய்யக்கூடிய சிகிச்சைகள் காணப்படுகின்றன. முதலாவது பாலுறவின் போது இரத்தம் வெளியேறுவதன் மூலம் கன்னித்தன்மை நிர்ணயிக்கப்படுகிறது எனும் தப்பபிப்பிராயம் இதன் மூலம் மேலும் ஊக்குவிக்கப்படுகிறது. அதனால் அவ்வாறான சிகிச்சைகளில் கடுமையான நெறிமுறை சார் பிரச்சனைகள் காணப்படுகின்றன.

அதிகமான வேளைகளில் எம் சமூகம் பெண்களின் கன்னித்தன்மையை போற்றுகின்றது எனினும் ஆண்கள் தொடர்பில் அதற்கு எதிர்மாறான கருத்தினை கொண்டுள்ளது. இவ்வாறான இரண்டகமான கருத்தியலினால் சமூகத்திலிருந்து எழும் பழிச்சொல் மற்றும் அவமானம் பெண்களை மட்டுமே பாதிக்கின்றது. எவ்வாறிருப்பினும், கன்னித்தனமை என்பது சமூகத்தினால் ஏற்படுத்தப்பட்டதொரு கருத்து என சமூக விஞானிகள் கூறுகின்றனர்.

Slide மாதவிடாய் என்றால் என்ன?
பெண் பிள்ளைகளுக்கு மாதவிடாய் அவர்கள் பூப்படைதலை அடைந்ததும் ஏற்படுகின்றது. அதிகமான நேரங்களில் இது 10 - 15 வயதிற்குட்பட்ட காலப்பகுதியில் இடம்பெறுகின்றது. இலங்கையில் அதிகமான பெண் பிள்ளைகள் 13 - 14 வயதிற்குட்பட்ட காலத்தில் பூப்படைதலை அடைகின்றனர். 45 - 50 வயத்திற்கிடைப்பட்ட காலத்தில் மாதவிடாய் முடிவிற்கு வருகின்றது. இது மெனோபோஸ் (Menopause) என அழைக்கப்படுகின்றது.

பூப்படைதல் இடம்பெற்ற பின், வெற்றிகரமான உடலுறவை எதிர்பார்த்து, சூலகங்கள் 28 நாட்களுக்கு ஒருமுறை முதிர்ச்சியடைந்ததொரு முட்டை அல்லது சூலை வெளியேற்றுகிறது. கருக்கட்டலை எதிர்பார்த்து கருப்பை அதற்கு ஆயத்தமாக கரு வளரக்கூடியதொரு சூழலை ஆயத்தப்படுத்துகின்றது. எனினும் அனைத்து முட்டைகளும் விந்தணுவுடன் இணைந்து கருவாக உருவாகுவது இல்லை. கருக்கட்டல் இடம்பெற காத்திருந்த கருப்பையினுள், கருக்காட்டாத முட்டை வந்தடைந்த பின், கரு வளருவதற்கான தேவை இல்லாததனால், கருப்பையின் சுவர்கள் உடைந்து வெளியேறுகின்றன. இவையனைத்தும் யோனித்துவாரத்தின் மூலம் வெளியேறுகின்றன. அவை வெளியேறிய பின் சில நாட்களில் கருப்பை மீண்டும் தன்னை தயார்படுத்த ஆரம்பிக்கின்றது. இது மாதவிடாய் என அழைக்கப்படுகின்றது, இந்த செயற்பாட்டின் முழுமையும் மாதவிடாய் சக்கரம் என அழைக்கப்படுகின்றது.

மாதவிடாய் ஏற்படும் போது கர்ப்பப்பை சுருங்குவதானால் மற்றும் அதன் சுவர்கள் உடைவதனால், தசைப்பிடிப்பு, முதுகு வலி, மார்பகங்களில் மற்றும் அடி வயிற்றுப்பகுதிகளில் வலி போன்ற அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. தசைப்பிடிப்பு மற்றும் அந்த வலியின் அளவு போன்றவை நபரிலிருந்து நபருக்கு வேறுபடக்கூடும்.
பெண்களின் மாதவிடாய் தொடர்பில் இலங்கையில் இன்னும் வெளிப்படையாக கலந்துரையாடப்படுவதில்லை. அதை மறைத்து வைக்கவே எம் சமூகம் முயலுகிறது. கடைகளிலும் மாதவிடாய் துவாய்கள் விற்பனைக்கு வைக்கப்படுவது, இலகுவில் காண முடியாத இடங்களிலேயே வைக்கப்படுகின்றன. சில சூப்பர் மார்க்கெட்டுகளில் மாதவிடாய் துவாய்க்களின் அருகில் மறைவாக கொண்டு செல்வதற்கான பைகள் வைக்கப்படுகின்றன. இவற்றை வாங்குவோர்களும் மாதவிடாய் துவாய்களை மறைவாக கொண்டு செல்லவே விரும்புகின்றனர். இவ்வாறான பின்னடைவான சிந்தனைகளை சரியான தகவல்களை வழங்குவதன் மூலம் இல்லாது செய்யலாம்.

Slide பெண் பிள்ளைகள் மாதவிடாயின் போது
பாவிக்க வேண்டியது என்ன?
மாதவிடாய் சாதாரணமான மற்றும் இயற்கையானதொரு செயற்பாடாகும். ஆகவே நீங்கள் உங்கள் நாளாந்த வேலைகளை மாதவிடாயின் போது எவ்வித தடைகளும் இன்றி செய்யலாம். உடற்பயிற்சிகள் செய்யலாம். உங்கள் தொழில் வேலை விடயங்கள், கல்வி நடவடிக்கைகள், நபர்களை சந்திப்பது என நீங்கள் விரும்பும் எதையும் இக்காலங்களில் செய்யலாம். அதுபோலவே விளையாட்டுக்களில் ஈடுபடுவோர், இக்காலகட்டத்தில் உடல் ரீதியான சுகயீனம் எதுவும் இல்லையெனில், மற்ற நாட்களை போலவே விளையாட்டுக்களில் ஈடுபடலாம். பெண்கள், மாதவிடாய் காலங்களில் வெளியேறும் இரத்தத்தை உறிஞ்சக்கூடியதான சுகாதாரத் துவாய்களை அல்லது பாட்களை (Pad) பாவிப்பார்கள். எனினும் இதற்காக சில நேரங்களில் சுத்தமான துணியும் பாவிக்கப்படுகின்றது. அத்துடன் மென்ஸ்ட்ருவல் கப் (Menstrual cup) மற்றும் டம்பொன்ஸ் என்பவையும் இதற்காக பாவிக்கப்படுகின்றன.

மாதவிடாயின் போது எந்த சுகாதார பொருளை பாவிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது உங்கள் சொந்த தெரிவாகும். உங்களுக்கு மிகவும் சௌகரியமான மற்றும் பொருளாதார நிலைக்கு பொருத்தமான ஒன்றை நீங்கள் தெரிவு செய்யலாம். இலங்கையில் அதிகமாக பாவனையில் காணப்படுவது மாதவிடாய் துவாய்கள் மற்றும் சுத்தமான துணி என்பவையாகும். மேற்குறிப்பிட்டப்பட்டது போல கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் மாதவிடாய் துவாய்களின் விலை அதிகமாக இருப்பதனால் அதற்கு பதிலாக சுத்தமான துணிகளை மற்றும் மலிவான தேசிய அளவில் உற்பத்தி செய்யப்படும் மாதவிடாய் துவாய்களை பயன்படுத்துகின்றனர்.

மற்ற நாட்களை போலவே மாதவிடாய் நாட்களிலும் சுத்தமாக இருப்பது மிகவும் முக்கியமாகும். சரியான முறையில் 4 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை மாதவிடாய் துவாய்கள் மற்றும் டம்பொன்களை மாற்றப்பட மற்றும் மாதவிடாய் கப் (menstrual கப்) சுத்தம் செய்யப்பட வேண்டும்.

Slide மாதவிடாய் ஒழுங்கின்மை முதல் மாதவிடாய் ஏற்பட்ட ஆரம்ப காலங்களில், மாதவிடாய் ஒழுங்கின்றி காணப்படலாம். மாதவிடாயின் போது மாமிச உணவுகள் மற்றும் எண்ணெய் உள்ள உணவுகளை உண்ணலாம். மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு காணப்பட்டாலோ அல்லது 7 நாட்களுக்கு மேல் இரத்தப்போக்கு காணப்பட்டாலோ உங்கள் குடும்ப வைத்தியரை அல்லது வேறு ஒரு வைத்தியரிடம் செல்ல வேண்டும். வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்வதன் மூலம் சரியான முறையில் மற்றும் சரியான தகவல்கள் மற்றும் விழிப்புணர்வுடன் இவ்வாறான பிரச்சனைகளை கையாளலாம். மாதவிடாய் சில மாத காலமாக தாமதமாகின்றதெனில் அல்லது, மாதவிடாய் ஏற்படுமுன் அல்லது அதன் பின் தாங்க முடியாத, கடுமையான வேதனை அல்லது வலி காணப்படுமாயின் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மாதவிடாய் சக்கரத்திற்கு இடையிலான காலப்பகுதியில் இரத்தப்போக்கு காணப்படுமாயின் அல்லது தொடர்ச்சியாக மாதவிடாய் ஒழுங்கின்றி ஏற்பட்டால், அது தொடர்பில் கவனம் செலுத்தி அதற்கான மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இவை கட்டாயமாக கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகளாகும். இவற்றை அசட்டை செய்யக்கூடாது.

இவை சாதாரணமானவை என அசட்டையாக இருப்பது உங்கள் சுகாதாரத்திற்கும், உடல் நலனுக்கும் உகந்ததல்ல. சமூகத்தில் காணப்படும் தப்பபிப்பிராயங்கள் மற்றும் கட்டுக்கதைகளை ஊக்குவிக்க கூடாது.

Slide மாதவிடாய் சுகாதாரம் என்றால் என்ன? மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள் மாதவிடாய் காலங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை கடைப்பிடிப்பது மாதவிடாய் சுகாதாரம் என அழைக்கப்படும். இக்காலத்தில் சுத்தமாக இருப்பது, தினமும் குளிப்பது மற்றும் சுத்தமான உள்ளாடைகளை அணிவது என்பவை முக்கியமானது.

நான்கு மணிநேரத்திற்கு ஒருமுறையேனும் மாதவிடாய் துவாய்களை மாற்றுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. எனினும் பாடசாலை மாணவர்களுக்கு மாற்றுவதற்கான வசதி இல்லாததனால் அவர்கள் காலை முதல் வீடு திரும்பும் வரை ஒரே மாதவிடாய் துவாயை பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன என்பதை நாம் காணலாம். இதனை முடிந்த வரை தவிர்ப்பது மாதவிடாய் சுகாதாரத்திற்கு முக்கியமாகும்.

மாதவிடாய் நாட்களில் குளிக்கக்கூடாது எனும் ஒரு தப்பபிப்பிராயம் சமூகத்தில் காணப்படுகின்றது. இதற்கு எவ்வித விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களும் இல்லை. இவ்வாறான தப்பபிப்பிராயங்களை இல்லாது செய்து சரியான தகவலைகளை அறிந்திருப்பது முக்கியமாகும்.
மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள் பல உள்ளன. ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் அதிக வலி மிகுந்த மாதவிடாய் அவற்றில் பிரதானமானவை. முதுகு வலி, அடி வயிற்றுப்பகுதியில் வலி, கால் வலி, அனோரெக்சியா என அழைக்கப்படும் உணவு உட்கொள்ள விருப்பமற்ற உணர்வு, வாந்தி மற்றும் தலை வலி. மாதவிடாய் ஒழுங்கின்றி இருக்கும் போது, அதிக நாட்களுக்கு நீடிக்கும் போது மாதவிடாய் சக்கரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இரத்தப்போக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களில் இரத்தசோகை (anemia) போன்றவை ஏற்படக்கூடும்.

வேதனை மிகுந்த மாதவிடாய் குறித்து கூறும் போது, எண்டோமெட்ரியோஸிஸ் குறித்தும் கூறப்பட வேண்டும். எண்டோமெட்ரியோஸிஸ் என்பது வேதனை மிகுந்த மற்றும் மிகவும் அசௌகரியமான மாதவிடாயை ஏற்படுத்தும் ஒரு நோய் நிலையாகும். இது கருப்பையினுள் காணப்படும் திசு படலங்கள் கருப்பைக்கு வெளியான பகுதிகளில் வளர்வதனால் ஏற்படுகின்றது. இவை சூலகங்கள், பலோப்பியன் குழாய் மற்றும் இடுப்பெலும்பை சுற்றியுள்ள பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அரிதான சந்தர்ப்பங்களில் இது குடல் மற்றும் சிறுநீர்ப் பையை சுற்றியுள்ள பகுதிகளையும் பாதிக்கலாம்.

Slide நீங்கள் செய்யக்கூடியது மாதவிடாய் நாட்களுக்கு தயார் நிலையில் இருங்கள். உடலை சுத்தமாக வைத்து தினமும் குளியுங்கள்.

சுத்தமான மாதவிடாய் துவாய்களை பயன்படுத்துங்கள். மாதவிடாய் துவாய்கள் பரசிட்டமோல் அல்லது வேறு வலி நிவாரண மருந்துகளை அருகில் வைத்திருங்கள். அதிகமான நீரை அருந்துங்கள், ஓய்வாக இருங்கள். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். உங்கள் பணிகளை/ வேலைகளை தொடர்ந்து செய்யுங்கள்.

மாதவிடாய் காலங்களில் மச்சம் மற்றும் மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும் எனும் தப்பபிப்பிராயமும் சமூகத்தில் காணப்படுகின்றது. இதில் எவ்வித உண்மையும் இல்லை. இந்தக்காலப்பகுதி வளர்ச்சிக்கு முக்கியமானது என்பதால் அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது முக்கியமானதாகும். இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் போன்ற புரதச்சத்து கொண்ட உணவுகளை நீங்கள் உட்கொள்ளும் உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.

மாதவிடாய் வலி அல்லது வேதனை மிகுந்ததாய் காணப்பட்டால் அல்லது வேறு அசாதாரண நிலைகள் காணப்பட்டால் வைத்திய ஆலோசனையை நாடுங்கள்.

05 | ஆண்களின் இனப்பெருக்கத் தொகுதி

Slide ஆணின் இனப்பெருக்கத் தொகுதியில் வெளிப்புறப்பகுதி மற்றும் உட்புறப் பகுதி என இரண்டு பகுதிகள் உள்ளன. வெளிப்புறப் பகுதியில் நாம் காண்பது ஆணுறுப்பு மற்றும் விதைப்பை. பாலியல் உறவிற்கு மற்றும் சிறுநீர்கழிக்க ஆணுறுப்பு பயன்படுத்தப்படுகின்றது.
ஆணின் இனப்பெருக்கத்
தொகுதி என்றால் என்ன?

விதைப்பையில் டெஸ்டெஸ்டரோன் ஹோர்மோன் உற்பத்திச் செய்யப்படுகின்றது. கட்டிளமைப்பருவத்தை அடையும் பொழுது ஒரு ஆண் பிள்ளையின் உடல் வளர்ச்சி மற்றும் விருத்தி ஆரம்பிக்கின்றது. அந்த சந்தர்ப்பத்தில் விந்து உற்பத்தி மற்றும் பாலியல் பண்புகள் முன்பு கூறப்பட்ட டெஸ்டெஸ்டரோன் ஹார்மோன்களின் காரணமாக இடம்பெறுகின்றது.

ஆணின் இனப்பெருக்கத்தொகுதி மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து எளிய முறையில் கூறுவதெனில், ஆணுறுப்பு யோனிவழியினுள் விந்துக்களை செலுத்த மற்றும் சிறுநீர் கழிக்க பயன்படுத்தப்படும் ஆணின் பாலியல் உறுப்பாகும். முன்தோல் எனப்படும் பகுதி ஆண்குறியை பாதுகாக்கும் சிறு சதையாகும். சிறுநீர்க்குழாய் என்பது சிறுநீர், விந்து மற்றும் சுக்கிலப்பாயத்தை வெளியேற்ற ஆணுறுப்பினுள் காணப்படும் ஒரு நீண்ட குறுகிய குழாயாகும். விதைப்பைகள் விந்துக்கள் மற்றும் ஆண்களுக்கான ஹார்மோன்களை சுரக்கும் உறுப்பாகும். ஆண்களின் இரண்டாம் நிலை பாலியல் பண்புகள் விருத்தியடைய பொறுப்பான உறுப்பு இதுவாகும்.

விதைப்பையில் உள்ள விதையினுள் விந்துக்கள் சேமித்து வைக்கப்படுகின்றன அவை விந்துக்களை உற்பத்தி செய்யும் ஒரு உறுப்பாகும். புரோஸ்டேட் சுரப்பியில் சுக்கிலப்பாயம் எனும் வெள்ளை நிற திரவம் சுரக்கப்படுகின்றது. அது விந்து ஆணுறுப்பிற்கு பயணிக்க மற்றும் யோனிவழியினுள் நுழைந்து அதனுள் பயணிக்க உதவும் திரவமாகும். உட்செலுத்தும் கலன் எனும் குறுகிய குழாய் விந்துக்களை விதைப்பையில் இருந்து ஆணுறுப்பிற்கு கொண்டுசெல்லும் குழாயாகும். மேலும் விதைப்பை விதையை அதிக வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் பையாகும். சிறுநீர்க்குழாய் விதையிலிருந்து வாஸ் டேபரன்ஸ் ஊடாக செல்லும் ஒரு குழாயாகும். கூப்பர் சுரப்பி என்பது ஆணுறுப்பில் உள்ள சிறுநீர்க்குழாயில் விந்துக்களுக்கு தேவையான சிறந்த சூழலை உருவாக்க தேவையான திரவங்களை சுரக்கும் ஒரு சுரப்பியாகும்.

06 | பால் மற்றும் பால்நிலை

Slide பால்நிலை என்பது சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் மீது காணப்படும் எதிர்பார்ப்பு சமூகத்தால் விதிக்கப்பட்ட பொறுப்புக்கள், உரிமைகள், வாய்ப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் அடையாளமாகும்.

பால்நிலையை தீர்மானிப்பதில் ஒருவரின் பொருளாதார சூழல், கலாச்சாரம், மதம் மற்றும் அரசியல் போன்றவை தாக்கம் செலுத்தும். சிறுவயது முதல் எம் பெற்றோரைப் பார்த்து அவர்களை போல நடந்துகொள்வது. அவர்கள் எமக்கு வழங்கும் விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றின் அடிப்படையில் நாம் ஆண் அல்லது பெண் எனும் சமூக அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்கிறோம் இதன் மூலம் நாம் எமக்கு சமூகத்தால் வழங்கப்படும் பால்நிலையின் அடிப்படையில் நடக்க ஆரம்பிக்கின்றோம்.
பால் மற்றும் பால்நிலை என்றால் என்ன? பிறப்பின் போது ஒரு நபருக்கு அவரின் உயிரியல் பண்புகள் உறுப்புக்களுக்கமைய ஆண் அல்லது பெண் என குறிக்கப்படுவது பால் என அழைக்கப்படுகின்றது. ஒரு தாய் மற்றும் தந்தையிலிருந்து வரும் குரோம்சோம்கள் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தீர்மானிக்கின்றது.

வளரும் போது குழந்தை வளரும் சூழலுக்கமைய பிள்ளைகள் இரண்டு விதங்களில், ஆண்/பெண் என்பதற்கமைய இருவிதமான நடத்தை மற்றும் பொறுப்புக்களை வழங்கும் வழக்கம் எம் சமூகத்தில் காணப்படுகின்றது. இதை எளிமையாக விளக்குவதெனில் பிள்ளைகள் பிறந்தது முதல் ஆண் பிள்ளைகளுக்கான உடைகள் நிறங்கள் என்றும் பெண் பிள்ளைகளுக்கான உடைகள் மற்றும் நிறங்களென்றும் மற்றும் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு வெவ்வேறான விளையாட்டுப் பொருட்கள் என்றும் பிரிக்கப்படுவதை நாம் காணலாம். மேலும் கூறுவதாயின் உடைகள் வாங்கும் போது பெண் பிள்ளைகளுக்கு இளம்சிவப்பு நிறம் மற்றும் ஆண் பிள்ளைகளுக்கு நீல நிறம் என பிரிக்கப்படுகின்றது. இவ்விதமாக நிறங்களில் ஏற்படுத்தப்படும் வித்தியாசத்தை நாம் சிறு வயது முதல் முதுமை வரை காணலாம்.

Slide பால்நிலை அடையாளம் என்பது நீங்கள் சுயமாக உணரும் பால்நிலையாகும், அதாவது நீங்கள் ஒரு ஆணாகவோ பெண்ணாகவோ உங்களை அடையாளப்படுத்தும், உணரும் விதம். இது உங்களுக்கு பிறப்பில் குறிக்கப்பட்ட பாலை விட வேறு ஒன்றாக இருக்கலாம். உங்கள் பால்நிலை அடையாளம் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பாலாகவோ அல்லது அதில் இருந்து வேறு பட்டதாகவோ அமையலாம். அநேகமானோரின் பால்நிலை அடையாளம் தம் உயிரியல் ரீதியான பாலுடன் வேறுபடுவது இல்லை, அத்துடன் அவர்கள் தாம் ஆணா அல்லது பெண்ணா என்பது குறித்த குழப்ப நிலையை சந்திப்பதும் இல்லை. ஆனால் இது அனைவருக்கும் பொதுவானதல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பால்நிலை அடையாளம் என்றால் என்ன? பால்நிலை வேறுபாடுகளை நாம் சமூகத்தில் காணக்கூடிய சந்தர்ப்பங்களாக, வேலைவாய்ப்புகளில் உள்ள வெவ்வேறு பங்களிப்புகளில் ஆண்களுக்கான வேலை, பெண்கள் செய்யக்கூடிய வேலை என்று பிரிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். ஆடைகள் அணிவது, விளையாட்டுப் பொருட்கள் போன்ற அனைத்திலுமே ஆண்கள் மற்றும் பெண்களுக்கானவை என பிரிப்பதன் மூலம் இரு தரப்பினருக்கும் குடும்பங்களுக்குள் காணப்படும் பொறுப்பு என்ன என்பது தெளிவு படுத்தப்படுகின்றது.

ஆதி காலம் முதல் இலங்கை சமூகத்தில், வீட்டினுள் சமைத்தல், குழந்தைகளை பராமரித்தல் போன்ற பொறுப்புக்கள் பெண்களால் செய்யப்பட்டு வந்துள்ளன. தொழிலில் ஈடுபட்டுள்ள கணவன் அல்லது ஆண் பணம் சம்பாதித்தல், மற்றும் குடும்பத்தை பாதுகாத்து கவனிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். தற்போதைய நவீன சமூகம் மாறி வரும் சூழலில், குடும்பத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் தொழில் புரியும் நிலையை நாம் காணலாம். ஆகவே மேற்குறிப்பிடப்பட்டுள்ள இவ்வாறான பால்நிலை வேறுபாடுகளை இன்றைய சமூகத்தில் பிரித்து பார்க்க முடியாது. அநேக வீடுகளில் நேரம் மற்றும் வசதிகளுக்கமைய வீட்டு பொறுப்புக்களை கணவன் மற்றும் மனைவி இணைந்து தமக்குள் அவற்றை பிரித்து செய்கின்றனர்.

Slide உடல் ரீதியான பாலியல் பிரதிபலிப்பும் பாலியல் ஆசையும் ஒன்றல்ல. பாலியல் ஆசை இருந்தாலோ இல்லாவிட்டாலோ ஒரு ஆண் பிள்ளையின் அல்லது ஒரு ஆணின் ஆணுறுப்பு விரைப்படையலாம். அது போலவே, ஆணுறுப்பு விரைப்படையாது பாலியல் ஆசை ஏற்படலாம். அது போலவே, பாலியல் ஆசையும் பாலியல் செயற்பாடும் ஒன்றல்ல. பாலியல் ஆசையை உணரும் ஒரு நபர் அது தொடர்பில் செயற்படவோ, செயற்படாதிருக்கவோ தீர்மானிக்கலாம். இது அந்த நபரின் கையிலுள்ளது. பாலியல் உணர்வு மற்றும் பாலியல் ஆசை
என்றால் என்ன?
ஒரு நபர் மீது பாலியல் ரீதியில் ஈர்க்கப்படுவது பாலியல் உணர்வு என அழைக்கப்படுகின்றது. சிறு வயது முதல் முதிர் வயது வரை ஒருவர் பாலியல் உணர்வுகளை உணர்கிறார். குழந்தை பெற்றுக்கொள்ள வயதெல்லைகள் காணப்படும் போதிலும், பாலியல் உணர்விற்கு வயதெல்லைகள் இல்லை.

பூப்படைத்தல் செயற்பாட்டை கட்டுப்படுத்தும் ஹோர்மோன்கள் எம் உணர்வுகள் மற்றும் உளவியல் ரீதியான எண்ணங்களில் தாக்கம் செலுத்துவதனால், பாலியல் உணர்வுகளை உணர, பாலியல் ஈர்ப்பை உணர மற்றும் ஆண் அல்லது பெண்கள் அல்லது இருதரப்பினர் மீதும் ஈர்ப்பு கொள்ள ஆரம்பிக்கின்றோம். இது இயற்கையான மற்றும் மிகவும் சாதாரணமான உணர்வு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். முக்கியமாக பாலியல் உணர்வுகள் ஏற்படுவது, பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுவது என அரத்தப்படாது. பாலியல் உணர்வுகள் ஏற்படுவதனால் அவற்றை நாம் செயற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே பாலியல் செயற்பாடுகள் குறித்து நாம் சிந்திப்பது சாதாரணமான விடயம், அத்துடன் அது குறித்து நாம் வெட்கப்படவோ களங்கம் கொள்ளவோ தேவை இல்லை.

பாலியல் செயற்பாட்டில் ஈடுபட ஏற்படும் விருப்பத்தை பாலியல் ஆசை என கூறலாம். பாலியல் உணர்வைப்போலவே, பாலியல் ஆசைக்கும் வயது, பால்நிலை வேறுபாடுகள் இல்லை.

ஒரு நெருங்கிய உறவுக்குள் ஒரு நபருக்கு பாலியல் ஆசை வேறு சந்தர்ப்பங்களை விட அதிகமாக ஏற்படக்கூடும். அனைவருமே பாலியல் ஆசையை உணருவார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், இது சாதாரணமானது மற்றும் இயற்கையானது. இந்த பாலியல் ஆசை எதிர்பாலீர்ப்பாகவோ, தன்பாலீர்ப்பாகவோ அல்லது இருபாலீர்ப்பாகவோ அமையலாம். எனினும் பாலியல் ஆசை மற்றும் காதல் எனும் இரண்டும் ஒன்றல்ல. காதல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நபருக்கு பாலியல் ஆசை மற்றும் ஈர்ப்பு ஏற்படலாம்.

07 | சுய இன்பம் காணல்

Slide சுய இன்பம் காணல் என்றால் என்ன? சுய இன்பம் காணல் என்பது ஒருவர் தனது பாலியல் உறுப்புக்களை, தொடுதல், தடவுதல் மற்றும் தூண்டுவதன் மூலம் பாலியல் இன்பத்தையும் திருப்தியையும் பெறுவதாகும். சுய இன்பம் காணுதல் இயற்கைக்கு மாறானதோ, ஒருவரின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோ அல்ல. ஆண் பெண் இருபாலாருமே சுய இன்பம் காண்பதில் ஈடுபடலாம். சுய இன்பம் காண்பதால் கர்பமடைவதோ, எச்.ஐ.வி அல்லது வேறு பாலியல் தொற்றுக்குள்ளாகும் ஆபத்துக்கள் இல்லை.

பெண்கள் தம் பெண் குறி மூலம், யோனித்துவாராம் மற்றும் பாலியல் உணர்வுகள் அதிகம் உள்ள மார்பகங்கள் போன்ற பகுதிகளை தொடுவது மற்றும் தூண்டுவதன் மூலம் சுய இன்பம் காண்கின்றனர். ஆண்கள் தம் ஆணுறுப்பினை தொடுவதன், தூண்டுவதன் மூலம் சுய இன்பம் காண்கின்றனர்.

சுய இன்பம் காண்பது மனிதர்கள் தம் உடல் மற்றும் பாலியல்பு குறித்து ஆராய்ந்து அறிவதற்கு உதவும் ஒன்றாக கருதப்படுகின்றது. அநேகமானோர் தம் வாழ்நாள் முழுவதும் சுய இன்பம் காண்பதன் மூலம் திருப்தியடைகின்றனர். பாலியல் துணையொருவரை கொண்ட அல்லது திருமணம் செய்த சந்தர்ப்பங்களும் இதில் அடங்கும்.

சுய இன்பம் காண்பது தனிப்பட்ட அந்தரங்க செயற்பாடாகும். இதனை பொது இடங்களில் செய்யக்கூடாது. அத்துடன் உங்கள் நாளாந்த செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் நீங்கள் சுய இன்பம் காண்பதில் ஈடுபடுகிறீர்கள் என உணர்வீர்களானால் ஒரு வைத்தியரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளவும்.

Slide சுய இன்பம் குறித்த தப்பபிப்பிராயங்கள்
சுய இன்பம் காண்பதன் மூலம் விந்துக்களின் அளவு குறைவடையாது. கருவுருவதற்கான வாய்ப்பு இதனால் பாதிக்கப்படாது மலட்டுத்தன்மை ஏற்படாது. சுய இன்பம் காணும் பெண்களுக்கு குழந்தைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாது போகும் எனும் ஒரு கருத்து காணப்படுகின்றது, இது ஒரு தப்பபிப்பிராயமாகும். அதிகமாக சுய இன்பம் காண்பதனால் முடி கொட்டும் மற்றும் இடை குறையும் என்பதும் உண்மையில்லை. இவை ஆதாரபூர்வமற்றவை. சுய இன்பம் காண்பதனால், உடல் மெலிவடையும், உளநலம் பாதிக்கப்படும், முகத்தில் முகப்பரு உண்டாகும், விரைவாக முதுமையடைவார்கள், பாலியல் செயற்பாடு பாதிக்கப்படும் போன்ற கருத்துக்கள் தப்பபிப்பிராயங்களாகும். இவற்றிற்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் இல்லை. அதிகமான நேரங்களில் இவ்வாறான பிழையான தகவல்களை சமூகத்தில் பரப்புவது, சில மருந்து வகைகளை விற்பனை விநியோகம் செய்வதற்காகும். நாம் இந்த தப்பபிப்பிராயங்களை இல்லாது செய்ய வேண்டும். இந்த தப்பபிப்பிராயங்களை பரவாது தடுப்பதும் நாம் செய்யக்கூடியதாகும். இதற்காக நாம் சரியான தகவல்களையும் விழிப்புணர்வையும் சமூகத்தில் வழங்க வேண்டும்.

Slide பாலியல் புணர்ச்சியின் திருப்தி என்றால் என்ன?
பாலியல் தூண்டலுக்கு பதிலளிக்கும் சக்கரத்தில் அல்லது பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுகையில் ஏற்படும் தூண்டுதலின் மூலம் பெறப்படும் முழுமையான உச்ச இன்பம் பாலியல் புணர்ச்சியின் திருப்தி என அழைக்கப்படுகிறது. இதனை ஆண் பெண் இருபாலாரும் அனுபவிக்கின்றனர். ஒரு நபருடன் பாலியியல் உறவில் ஈடுபடுவதன் மூலம் மற்றும் சுய இன்பம் காண்பதன் மூலம் பாலியல் புணர்ச்சியின் திருப்தியை பெற முடியும்.

பாலியல் புணர்ச்சியின் திருப்தி என்பது அதிக திருப்பதியை மற்றும் இன்பத்தை தரும் ஒரு அனுபவமாகும். எம் தசைகள் சுருங்கி விரிந்து பாலுறுப்புக்களில் திரவங்கள் சுரக்கப்படுகின்றன. ஆண்களுக்கு இது ஆணுறுப்பு விரைப்படைந்து விந்து வெளியேறுவதன் மூலமும், பெண்களுக்கு இது அவர்களின் யோனிப்பகுதி ஈரமடைந்து ஒரு நிறைவை உணர்வதன் மூலமும் இடம்பெறுகின்றது.

பாலியல் உறவின் போது இரு தரப்பினரும் பாலியல் புணர்ச்சியின் திருப்தியை அடைவது முக்கியமான விடயமாகும். ஒருவர் அல்லது இரு தரப்பினருக்கும் தாம் எதிர்பார்த்த திருப்தி இன்பம் கிடைக்கவில்லையெனில் அவர் பாலியல் உறவில் கொள்ளும் விருப்பம் ஆர்வம் குறைவடையலாம். இதன் காரணமாக கணவன் மனைவிக்கிடையில் மற்றும் காதலருக்கிடையில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஒருவரின் விருப்பங்களை மற்றவருடன் வெளிப்படையாக கலந்துரையாடுவதன் இந்த பிரச்சனைகளை தவிர்த்து வெற்றிகரமான பிரதிபலன்களை காணலாம். அநேகமான நேரங்களில் தொடர்பாடலில் உள்ள பிரச்சினைகளினால் சிறிய பிரச்சனைகள் கூட பூதாகாரமாக மாறலாம்.

Slide பெண்களின் பாலியல்
புணர்ச்சியின் திருப்தி
இது பாலியல் பாலியல் புணர்ச்சியின் திருப்தியின் உச்ச கட்டம் எனவும் கூறலாம். பாலியல் உறவின் போது ஏற்படும் தூண்டுதலின் காரணமாக பெண்ணின் யோனிப்பகுதியில் உள்ள தசைகள் சந்தமொன்றிக்கமைய சுருங்கி விரிகின்றன. ஒரு பெண்னின் பெண்குறி மூலத்தை தடவுதல் மற்றும் உடல் ரீதியில் அவளை தூண்டுவதன் மூலம் ஒரு பெண் புணர்ச்சியின் திருப்தியை அடைகிறாள். புணர்ச்சியின் திருப்தியை ஒரு துணையுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதன் மூலமோ, சுய இன்பம் காண்பதன் மூலமோ அடையலாம்.

ஆண்களைப்போலன்றி பெண்கள் பாலியல் புணர்ச்சியின் திருப்தியை அடையக்கூடிய வலிகள் பல உள்ளன. இந்த முறையொன்றின் மூலமோ அல்லது சில முறைகளை பயன்படுத்தியோ ஒரு பெண் பாலியல் புணர்ச்சியின் திருப்தியை அடையலாம். எனினும் இது பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

பெண்குறி மூலத்தை தூண்டுவதே மிகவும் பொதுவான முறையாகும். பெண்குறி மூலம் ஒரு திசையிலோ அல்லது பல விதங்களில் தொட்டு தடவப்படுவதன் மூலம் தூண்டப்படுகிறது. யோனிவழியை புணர்வதன் மூலம் புணர்ச்சியின் திருப்தியை அடைவது மற்றுமொரு முறையாகும். இதற்காக தம் விரல்களையோ பாலியல் விளையாட்டுப் பொருட்களை பாவிக்கலாம். கருப்பை கழுத்தினை தூண்டுவது மற்றுமொரு முறையாகும். கருப்பை கழுத்துப்பகுதியை புணர்வதன் மூலம் முழு உடலும் ஒரே நேரத்தில் புணர்ச்சியின் திருப்தியை அடைய முடியும்.

அது போலவே யோனியை மற்றும் பெண்குறி மூலத்தை ஒரே நேரத்தில் தூண்டுவதன் மூலமும் புணர்ச்சியின் திருப்தியை அடைய முடியும்.

08 | பாலியல் உறவிற்கு பாதுகாப்பான காலப்பகுதி

Slide சாதாரணமாக ஒரு பெண்ணின் மாதவிடாய் சக்கரம் 28 - 30 நாட்கள் கொண்டதாக இருக்கும். எனினும் சில பெண்களுக்கு இது வேறுபடக்கூடும். இந்த சக்கரத்தின் நடுப்பகுதியில் ஒரு சூழ் அல்லது முட்டை முதிர்ச்சியடைந்து வெளியேறுகின்றது. இந்த சூழ் 24 மணித்தியாலங்கள் மட்டுமே உயிரோடிருக்கும். இந்த 24 மணித்தியாலங்களுக்குள் சூழ் ஒரு விந்தினை சந்திக்கவில்லையெனில், அது கருப்பையில் பதிக்கப்பட்டு மாதவிடாயுடன் வெளியேறும்.

பெண்களின் மாதவிடாய் சக்கரம் நபருக்கு நபர் வேறுபடுவதனால், பொதுவாக மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளிலிருந்து, ஒன்பதாவது நாள் முதல் பதினேழாவது நாள் வரை ஒரு பெண் கர்ப்பமடையக்கூடிய நாட்களாக கருதப்படுகின்றன. ஒருவருக்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் விருப்பம் இல்லையெனில், இக்காலத்தில் பாலியல் உறவில் ஈடுபடாதிருத்தல் அல்லது ஆணுறை பாவித்து பாலியல் உறவில் ஈடுபடலாம். அதே வேளை குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்பினால் இக்காலகட்டத்தில் பாலியல் உறவில் ஈடுபடலாம்.

மாதவிடாய் இரத்தப்போக்கு ஆரம்பித்த முதல் நாள் மாதவிடாய் சக்கரத்தின் முதல் நாளாக கருதப்படுகின்றது. அடுத்த மாதவிடாய் இரத்தப்போக்கு ஆரபிப்பதற்கு முந்தைய நாள் இச்சக்கரத்தின் கடைசி நாளாக கருதப்படுகின்றது.

பாலியல் உறவில் ஈடுபடும் நேரங்கள் அல்லது கால இடைவெளி தனி நபர்களின் காரணிகளை பொறுத்து அமையும். ஒரு பெண் தன் கர்ப்பமடையக்கூடிய காலப்பகுதியில் இருப்பின், முதலாவது பாலியல் உறவின் போது கர்ப்பமடையக்கூடும். பாலியல் செயற்பாட்டின் போது சுரக்கப்படும் சுரப்பிகளில் உள்ள விந்துக்கள் பெண்ணின் யோனிப்பகுதியில் படியக்கூடும் என்பதனால், வெவ்வேறு விதமான பாலியல் உறவின் மூலம் ஒரு பெண் கர்ப்பமடையக்கூடும்.
பெண்கள் கர்ப்பமடையக்கூடிய காலப்பகுதி எது?

09 | பாலியல் பொறுப்பு

Slide பாலியல் பொறுப்பு என்றால், பாலியல் ரீதியான விடயங்களில் பொறுப்புடன் நடந்துகொள்வதாகும். இவ்வாறு பாலியல் ரீதியில் பொறுப்புடன் நடந்து கொள்வது சமூகத்தில் வாழும் மக்களின் பாலியல் சுகாதாரத்தை முன்னேற்ற பெரிதும் பங்களிக்கும். பாலியல் பொறுப்புக்களில் முக்கியமாக சில விடயங்கள் அடங்கியுள்ளன. பாலியல் பொறுப்பு என்றால் என்ன? 2. ஒருவரையொருவர் பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாத்தல் மற்றும் அவற்றை தடுத்தல் முக்கியமானதொரு பாலியல் பொறுப்பாகும். 1. போதுமான அளவு பாலியல் சுகாதாரம் குறித்த அறிவினை கொண்டிருத்தல். இது பாதுகாப்பான பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட உதவும். 3. பாலியல் செயற்பாடுகள் குறித்த தீர்மானங்களை மேற்கொள்ளல் மற்றும் பாலியல் செயற்பாடுகளை நிர்வகித்தலும் பாலியல் பொறுப்புக்களில் அடங்கும். தெரிந்த மற்றும் அறிவார்ந்த தீர்மானங்களை மேற்கொள்ளல், பாதுகாப்பான பாலியல் உறவில் ஈடுபடுதல், திட்டமிடாத கர்ப்பங்களை தவிர்ப்பதும் பாலியல் செயற்பாடுகளை நிர்வகித்தலில் பெரும் பங்கு வகிக்கின்றது. 4. பாலியல் உறவில் ஈடுபடும் இருவருக்கும் பாலியல் பொறுப்புக்கள் மற்றும் உரிமைகள் உள்ளன. இதனால், ஒருவரையொருவர் மதித்து திருப்திகரமான மற்றும் பாதுகாப்பான பாலியல் உறவினை கட்டியெழுப்புவதும் பாலியல் பொறுப்பாகும்.

Slide பாதுகாப்பான பாலியல் செயற்பாடு என்றால் என்ன? பாதுகாப்பற்ற பாலியல் உறவில் ஈடுபடும் போது, பாலியல் தொற்றுக்கள். எச்.ஐ.வி, உள ரீதியான தாக்கங்கள், வீட்டில் பாடசாலையில் மற்றும் வேலைசெய்யுமிடங்களில் இருந்து ஒதுக்கப்படுத்தல், திட்டமிடாத கர்ப்பங்கள், தற்கொலை அல்லது தற்கொலை முயற்சிகள் போன்றவற்றிற்கு முகம்கொடுக்கும் ஆபத்துக்கு இட்டுச்செல்லலாம். அதனால் இருவருக்கிடையேயான உறவில், அந்த உறவின் ஆழம் மற்றும் அர்த்தம் குறித்து இருவரும் புரிந்துணர்வுடன் இருப்பது முக்கியமானதாகும்.

ஆண் பெண் இருதரப்பினருமே பாலியல் உறவில் ஈடுபடுமுன், சரியாக சிந்தித்து பொறுப்பான மற்றும் பாதுகாப்பான பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது மற்றும் தெரிவு செய்வது முக்கியமானதாகும். அனைத்து விதமான பாலியல் உறவுகளின் போதும் ஆணுறை பாவிப்பதன் மூலம் மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான பாலியல் உறவில் ஈடுபட முடியும். அதுபோலவே இது இருதரப்பினரதும் பொறுப்பாகும்.

அநேகமான நேரங்களில் சிந்திக்காது பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது உயிராபத்துக்களை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களை கூட ஏற்படுத்தலாம். ஒரு உறவு எப்படியானது, அதன் எல்லைகள் என்ன போன்றவற்றை இருவரும் கலந்தாலோசித்து அதனுடன் இருவரும் உடன்படுவது நல்லது. இது பல பிரச்சனைகளை தவிர்த்து அவற்றை ஆரம்பத்திலேயே தீர்க்க உதவும்.

10 | பாலியல் ஈர்ப்பு மற்றும் பால் அடையாளம்

Slide பாலியல் ஈர்ப்பு என்பது ஒரு நபர் எந்த பாழ்நிலையின் (ஆண்/பெண்) பால் ஈர்க்கப்படுகிறார் என்பதை குறிப்பதாகும்.

அந்த ஈர்ப்பு எதிர்பாலீர்ப்பாகவோ, தன்பாலீர்ப்பாகவோ, இருபாலீர்ப்பாகவோ அல்லது LGBTQI நபர்கள் மீது கொள்ளும் ஈர்ப்பாகவோ இருக்கலாம். LGBTQI என்பதன் விரிவு பின்வருமாறு; தன்பாலீர்ப்புடைய பெண்கள் (Lesbian), தன்பாலீர்ப்புடைய ஆண்கள் (Gay), இருபாலீர்ப்புடைய நபர்கள் (Bisexual), திருநர்கள் (Transgender), பால்நிலை தீர்மானிக்காதோர் (Queer) மற்றும் இடைஇலிங்கத்தவர் (இருபால் உறுப்புக்களையும் கொண்டவர்கள் Intersex)

இந்த ஈர்ப்பு உடல்ரீதியான விடயங்களின் அடிப்படையில் அல்லது உணர்வு மற்றும் உள ரீதியான விடயங்களின் அடிப்படையில் ஏற்படலாம்.உடல் ரீதியான விடயங்களில் மிடுக்கான மற்றும் அழகான தோற்றம் போன்றவை அடங்கும். அவ்வாறே உணர்வு மற்றும் உள ரீதியான விடயங்களில் நல்ல குணவியல்புகள், அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொள்ளல் மற்றும் ஆற்றல்கள் போன்றவை அடங்கக்கூடும். இவற்றுடன் தொடர்புடைய வேறு பாலியல் நாட்டங்களும் காணப்படலாம்.

இது உயிரியல் ரீதியான மற்றும் இயற்கையான விடயமாகும் என்பதுடன் இது எவ்விதமானதொரு மனநோயும் அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பாலியல் ஈர்ப்பு என்றால் என்ன?

11 | பாலியல் உரிமைகள்

Slide பாலியல் உரிமைகள் என்பது தனிப்பட்ட நபர்களுக்கு அவசியமான ஒன்றாகும். சர்வதேச சட்டங்கள் மற்றும் சாசனங்கள், பாலியல் உரிமைகள் மனித உரிமைகளாகும் என்பதை அங்கீகரித்துள்ளன. அனைவருக்கும் எவ்வித பாரபட்சமுமின்றி பாலியல் சுகாதார சேவைகள் காணப்படும் உச்ச கட்ட தரத்துடன் பெற்றுக்கொள்வதற்கான உரிமை ஒரு பாலியல் உரிமையாகும். பின்வருவன பாலியல் உரிமைகளாக கருதப்படுகின்றன. பாலியல் உரிமைகள் என்றால் என்ன? 1. பாலியல் மற்றும் இனப்பருக்க சுகாதார பராமரிப்பு சேவைகளை அணுகுவதற்கான உரிமை.
2. சரியான பாலியல் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான உரிமை.
3. ஒருவரின் உடல் மீதான முழுமையான மரியாதை மற்றும் கௌரவத்தை அனுபவித்தல்.
4. துணையை தெரிவு செய்யும் உரிமை.
5. பாலியல் செயற்பாட்டில் ஈடுபட தீர்மானிப்பதற்கான உரிமை.
6. சம்மதத்துடனான பாலியல் உறவில் மட்டுமே ஈடுபடுவதற்கான உரிமை.
7. தம்முடைய விருப்பம் தீர்மானத்திற்கமைய திருமணம் செய்வதற்கான உரிமை.
8. குழந்தைகள் பெறுவதா இல்லையா என தீர்மானித்தல், குழந்தைகளுக்கிடையிலான இடைவெளியை மற்றும் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதை தீர்மானித்தல்.
09. திருப்திகரமான, பாதுகாப்பான மற்றும் சந்தோஷமான பாலியல் வாழ்வை வாழ்வதற்கான உரிமை.
10. பாலியல் சுயாதீனம், பாலியல் பூரணத்துவம் மற்றவர்களின் பாலியல் பாதுகாப்பு மற்றும் பாலியல் துணைக்கு பாலியல் தொற்றுக்கள் இருக்கின்றதா என்பதை பரிசோதனை மூலம் அறிந்துகொள்ளல் அல்லது அதுகுறித்து அவர்களிடம் வினவுவதற்கான உரிமை.

12 | குடும்பத்திட்டமிடல்

Slide குடும்பத்திட்டமிடல் என்பது இயற்கையான முறைகளை, மருந்து வகைகளை அல்லது உபகரணங்களை பாவித்து கருத்தரிப்பதை தடுக்கும் முறைகளாகும். பல குடும்பத்திட்டமிடல் முறைகள் காணப்படுகின்றன.

குடும்பத்திட்டமிடலுக்கு நான்கு பிரதான நோக்கங்கள் காணப்படுகின்றன. முதலாவது - முதல் பிள்ளை பெறுவதை பிற்போடுதல்; இரண்டாவது - பிள்ளைகளுக்கிடையிலான இடைவெளியை பேண; மூன்றாவது - பிள்ளைகளின் எண்ணிக்கையை தீர்மானித்து அதை கட்டுப்படுத்த; நான்காவது - குழந்தைகள் இல்லாத நேரங்களில், குழந்தை பெறுவதற்கு தேவையான வைத்திய ஆலோசனைகளை மற்றும் சிகிச்சைகளை பெற.

பூப்படைந்த ஒரு இளம் பெண் பாலியல் உறவில் ஈடுபட்டால் அவள் கற்பமடையக்கூடும். மாதவிடாய் நிறுத்தம் அல்லது மெனோபோஸ் காலத்தை அடைந்த ஒரு பெண் கற்பமடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. சாதாரணமாக ஒரு பெண் குடும்பத்திட்டமிடல் முறைகளை பாவிக்க வேண்டிய வயதெல்லை 15 - 49 வயத்திற்கிடைப்பட்ட காலத்திலாகும். அது போலவே குடும்பத்திட்டமிடல் முறைகள் ஆண் பெண் இருபாலாருக்கும் காணப்படுகின்றன. இது தொடர்பான ஆலோசனைகளை குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறான தகவல்களை பெற்றுக்கொள்ள நீங்கள் தயங்கக்கூடாது. இவ்வாறான தகவல்களை வழங்க சுகாதார ஊழியர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அதை வழங்குவது அவர்களின் கடமையுமாகும்.
குடும்பத்திட்டமிடல் என்றால் என்ன?

Slide 1. தாய் மரணங்கள் மற்றும் பிரசவத்தின் போதான நோய் நிலைகளை குறைத்தல்
2. திட்டமிடாத கர்ப்பங்களினால் ஏற்படும் கருக்கலைப்புக்களை குறைத்தல்
3. சிசு மரணங்களை குறைத்தல்
4. எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் போன்ற தொற்றுக்களை தவிர்க்க வழி வகுத்தல்.
5. மக்களை பலப்படுத்தல் மற்றும் கல்வியில் முன்னேற்றங்களை அடைய
6. பெண்களுக்கு தம் உடல் மீதான அதிகாரத்தை வழங்குதல், அவர்களை பலப்படுத்தல் மற்றும் சுயாதீனமாக செயற்பட வழிவகுத்தல்.
7. குடும்பத்தின் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தல்
8. இளவயது கர்ப்பங்களை குறைத்தல்
9. குழந்தை இல்லாதவர்களுக்கு, குழந்தை பெற்றுக்கொள்வதற்கான அறிவுரைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்குதல்.
குடும்பத்திட்டமிடலின் மூலம் ஏற்படக்கூடிய
நன்மைகள் என்ன?

Slide விஞான ரீதியான குடும்பத்திட்டமிடல் முறைகள் தற்காலத்தில் பாவிக்கப்படும் அதிகமாக பாவிக்கப்படும் மற்றும் மிகவும் வெற்றிகரமான குடும்பத்திட்டமிடல் முறைகள் பல உள்ளன.

1. வாய் மூலமான மாத்திரைகள்
2. ஆணுறை (கொண்டம்)
3. பெண்ணுறை (பெண்களுக்கான கொண்டம்)
4. டிப்போப்ரொவேரா ஊசி
5. கருத்தடை ஹோர்மோன்கள் கொண்ட உட்பதிப்பு (உதா: Jadelle/Implanon)
6. லூப் (கருப்பையினுள் உட்பதிக்கும் லூப் - Intrauterine device/IUD)
7. அவசர கருத்தடை மாத்திரைகள்
8. பெண்களுக்கான நிரந்தர கருத்தடை சிகிச்சை
9. ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை சிகிச்சை

வாய்மூலமான கருத்தடை மாத்திரைகளில் ஈஸ்ட்ரஜன் மற்றும் புரோஜெஸ்டெரோன் ஹோர்மோன்கள் அடங்கியுள்ளன. வைத்திய ஆலோசனையின் படி இந்த மாத்திரைகளை வாய்மூலம் உட்கொள்ள வேண்டும். தேவையான தகவல்கள் மாத்திரைகளின் பொதியிலும் காணப்படும். எல்லா மருந்தகங்களிலும் வாய்மூல மாத்திரைகளை நீங்கள் வாங்கலாம். வாய்மூல மாத்திரைகளை ஒவ்வொரு நாளும் உட்கொள்ள வேண்டும். இவற்றை சரியான முறையில் பயன்படுத்தினால் 99.7% வீதமான சந்தர்ப்பங்களில் அது வெற்றியளிக்கும்.

ஆணுறையின் வெற்றி வீதம் சுமார் 97% வீதமாகும். ஆணுறைகள் மாத்திரமே கர்பமடைவதிலிருந்தும், பாலியல் தொற்றுக்கள் மற்றும் எச்.ஐ.வியிலிருந்து பாதுகாப்பை வழங்கும் ஒரே குடும்பத்திட்டமிடல் முறையாகும். ஆணுறை பாலுறவின் போது விரைத்த ஆணுறுப்பில் அணியப்படுகின்றது. ஒவ்வொருமுறை பாலியல் உறவில் ஈடுபடும் போதும் ஒரு புதிய ஆணுறையை பயன்படுத்த வேண்டும்.

பெண்ணுறைகளின் ஒரு முனையில் வளையக்கூடிய பொலியூதரேனினால் செய்யப்பட்டதொரு வளையம் காணப்படுகின்றது. அது பாலியல் உறவில் ஈடுபடுமுன் யோனியினுள் இது அணியப்பட வேண்டும். இது யோனி மூலம் விந்துக்கள் நுழைவதனை தடுக்கின்றது. பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுமுன் இது யோனியினுள் உட்செலுத்தப்பட்டு பாலியல் செயற்பாடு முடிவடைந்ததும் அகற்றப்பட வேண்டும். ஆணுறை போலவே இதனையும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தலாம்.

ஊசிமூலமான கருத்தடையில் அதிகளவிலான புரோஜெஸ்டெரோன் ஹோர்மோன்கள் காணப்படுகின்றன. இது டிப்போப்ரொவேரா/ டீபீ ஊசி என அழைக்கப்படுகின்றது. இந்த ஊசியை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பெற்றுக்கொள்ள வேண்டும். இது பெண்களுக்கானதாகும். இதனை பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

Slide இயற்கையான குடும்பத்திட்டமிடல் முறைகள் பல காணப்படுகின்றன. எனினும் அவை பிழைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடும் மற்றும் அதனால் திட்டமிடாத கர்ப்பங்கள் ஏற்படக்கூடும் என்பதனால் அவை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை.
இயற்கையான / பாரம்பரிய கருத்தடை முறைகள்
ஹோர்மோன் உட்பதிப்புக்கள், ஹோர்மோன்கள் அடங்கிய சிறு உபகாரணங்களாகும். பயிற்சி பெற்றதொரு வைத்தியரினாலோ, சுகாதார ஊழியரினாலோ இது ஒரு பெண்ணின் கைகளின் சதைகள் கீழ் உட்பதிக்கப்படும். அதன் பின் கருத்தரிப்பதை தடுக்கும் ஹோர்மோன்கள் அதிலிருந்து உடலுக்குள் செலுத்தப்படும். இந்த உட்பதிப்புக்களை 5 ஆண்டுகள் வரை உபயோகிக்கலாம்.

லூப் என்பது ஒரு பெண்ணின் கருப்பையினுள் உட்பதிக்கப்படும் "T" வடிவிலான ஒரு சிறு சாதனமாகும். இது ஒரு பயிற்சி பெற்ற வைத்திய நிபுணரால் மட்டுமே செய்யப்பட வேண்டும். இந்த சாதனத்தில் செப்பு அடங்கியுள்ளது, இதன் மூலம் விந்துக்கள் அழிக்கப்படுகின்றன; விந்து சூழை சந்திப்பதை இது தடுக்கிறது. ஒரு லூப்பினை 10 - 12 ஆண்டுகள் வரை பாவிக்கலாம்.

அவசர கருத்தடை மாத்திரைகள் புரோஜெஸ்டெரோன் அல்லது லீவோநோகெர்ஸ்டெரோல் எனப்படும் ஹார்மோன்களை கொண்டுள்ளது. பாதுகாப்பற்ற பாலியல் உறவில் ஈடுபட்டு 72 மணித்தியாலங்களுக்குள் இந்த மாத்திரையை உட்கொள்வதன் (24 மணித்தியாலங்களுக்குக்குள் உட்கொள்ளுவது சிறந்தது) மூலம் கர்ப்பமடைவதை தவிர்க்கலாம்.

பெண்களுக்கான நிரந்தர கருத்தடை என்பது பலோப்பியன் குழாய்களில் முடிச்சுக்களை போடும் ஒரு முறையாகும். சூலகங்களில் இருந்து கருப்பைக்கு சூழ்களை கொண்டு செல்லும் பலோப்பியன் குழாய்களை வெட்டி அதில் முடிச்சுக்களை போடும் ஒரு சத்திர சிகிச்சையின் மூலம் இது செய்யப்படுகின்றது. ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை ஆண்களுக்கான நிரந்தரமானதொரு கருத்தடையாகும். இது விதைப்பையிலிருந்து விந்துக்களை ஆணுறுப்பை நோக்கி கொண்டுசெல்லும் நாளத்தில் ஒரு தடுப்பை ஏற்படுத்துவதன் மூலம் செய்யப்படுகின்றது. இதன் பின் உடலில் விந்து மற்றும் சுக்கிலப்பாய உற்பத்தி நடைபெறும் எனினும் உற்பத்தியாகும் விந்துக்கள் உடலினுள் உறிஞ்சப்படும். இந்த நிரந்தர கருத்தடை முறைகள் மூலம் பாலியல் உணர்வு மற்றும் செயற்பாடுகள் பாதிக்கப்படாது.

Slide ⨀ ரிதம் அல்லது நாட் காட்டி முறை (Rhythm or Calendar method) ரிதம் முறைமை மாதவிடாய் சக்கரத்தை பயன்படுத்தி பெண்களின் கர்ப்பமடையக்கூடிய நாட்களை கணிப்பதன் மூலம் பயன்படுத்தப்படுகின்றது. ஒழுங்கான மாதவிடாய் சக்கரத்தை உடைய ஒரு நபர் 9வது நாள் முதல் 17ம் நாள் வரை பாலியல் உறவை தவிர்ப்பதன் மூலம் கர்ப்பமடைவதை தவிர்க்கலாம். இந்த கர்ப்பமடையக்கூடிய நாட்களை கணிப்பதில் பிழைகள் ஏற்படக்கூடும் என்பதனால் இதன் மூலம் திட்டமிடாத கற்பங்கள் ஏற்படலாம்.
ரிதம் முறையை கணக்கிடுவது எப்படி? இந்த முறையை நம்பி பயன்படுத்துமுன், குறைந்த பட்சம் 6 மாதங்களேனும் ஒரு பெண்ணின் மாதவிடாய் சக்கரம் எத்தனை நாட்களை உடையதென கணக்கிட வேண்டும். அவளது குறைந்த நாட்களை கொண்ட மாதவிடாய் சக்கரத்திலிருந்து 18ஐ கழிக்க வேண்டும்.
⨀ விந்து வெளியேறுமுன் ஆணுறுப்பை வெளியேற்றுதல் பாலுறவின் போது விந்து வெளியேறும் நேரத்தை முன்கூட்டியே தீர்மானிக்கும் மற்றும் விந்து வெளியேறுமுன் யோனியில் இருந்து ஆணுறுப்பினை வெளியேற்ற ஆணில் காணப்படும் ஆற்றலில் இந்த முறைமை முழுமையாக தங்கியுள்ளது. எனினும் விந்து வெளியேறுமுன் வெளியேறும் திரவத்தில் விந்துக்கள் இருக்க சாத்தியம் காணப்படுவதனால் இந்த முறைமை தோல்வியடையக்கூடும். ⨀ கருக்கலைப்பு கர்ப்ப காலத்தின் 28 வாரங்களுக்கு முன் கர்ப்பம் இயற்கையான அல்லது வேறு எந்தவொரு முறையின் மூலமேனும் அகற்றப்படுதல் கருக்கலைப்பு என அழைக்கப்படுகின்றது. கருக்கலைப்பில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, இயற்கையாக ஏற்படும் கருக்கலைப்பு மற்றும் ஏதேனும் ஒரு முறையை பாவித்து செய்யப்படும் கருக்கலைப்பு.
இயற்கையான / பாரம்பரிய கருத்தடை
முறைகள் என்றால் என்ன?

Slide இலங்கையில் கருக்கலைப்பு சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதுடன், ஒரு பெண்ணின் உயிருக்கு ஆபத்து காணப்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே கருக்கலைப்பு செய்யலாம். அதனால், திட்டமிடாத கர்ப்பங்களை தவிர்க்க பாதுகாப்பான பாலியல் உறவில் ஈடுபட வேண்டும். திட்டமிடாத கர்ப்பங்கள் தொடர்பில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமாயின் தகவல்களை பெற்றுக்கொள்ள சுகாதார சேவை நிலையமொன்றை அல்லது குடும்பத்திட்டமிடல் சங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

கருக்கலைப்பு தொடர்பில் சமூகத்தில் காணப்படும் சமூக மற்றும் கலாச்சார ரீதியான எண்ணப்பாடுகளினால் ஏற்படும் தடைகளின் காரணமாக, வைத்தியரல்லாத நபர்களிடம் ஆலோசனை மற்றும் கருக்கலைப்பை நாம் காண்கின்றோம். இவ்வாறான சந்தர்ப்பங்களின் விளைவு அதிகமான நேரங்களில் மிகப் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துவதாக அமையும். ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் தகுதி வாய்ந்த வைத்தியரிடமோ அல்லது இது தொடர்பானதொரு நிபுணரிடமோ ஆலோசனை பெற வேண்டும்.
பாதுகாப்பற்ற கருக்கலைப்பு என்றால் என்ன? பாதுகாப்பற்ற கர்ப்பம் என்பது தகுதியற்ற அல்லது மருத்துவரல்லாத ஒருவரால், அடிப்படை மருத்துவ சுகாதார வசதிகள் உபகரணங்கள் இன்றி பாதுகாப்பற்ற சூழலில் செய்யப்படும் கருக்கலைப்பாகும். பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். எதிர்காலத்தில் குழந்தைகள் பெறக்கூடிய ஆற்றல் இதன் மூலம் பாதிக்கப்படலாம்.

கருக்கலைப்பின் பின்னதான ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு உடனடியாக செல்ல வேண்டும். இலங்கையில் கருக்கலைப்பிற்கு பின்னதான வைத்திய பராமரிப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன மற்றும் அவை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் இளைஞர் மற்றும் கட்டிளமைப்பருவத்தினருக்கான 'யொவுன் பியச' சேவை நிலையங்கள் அமைந்துள்ளன. அங்கு உங்கள் பிரச்சனைகளை உணர்ந்து உங்களுக்கு தேவையான சேவைகளை நட்புடன் வழங்கும் சுகாதார ஊழியர்களிடம் நீங்கள் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.

Slide வேறு முறைகள் மூலம் கருக்கலைப்பு செய்தல்
(விருப்பத்தின் பேரில் செய்யப்படும்
கருக்கலைப்புகள்)
வேறு முறைகளின் மூலம் கருக்கலைப்பை செய்வது இலங்கையில் சட்டவிரோதமானது. கருவுற்று 28 வாரங்களுக்குள் கர்ப்பத்தை முடிவுக்கு கொண்டுவருவது அல்லது அகற்றுவது கருக்கலைப்பு என அழைக்கப்படுகின்றது.

கருக்கலைப்பிற்கு பல்வேறு முறைகள் பாவிக்கப்படுகின்றன. உறிஞ்சும் குழாய்கள் மூலம் மருத்துவரின் மூலம் செய்யப்படும் கருக்கலைப்பு, மாத்திரைகள் மூலம் செய்யும் மருத்துவ கருக்கலைப்பு மற்றும் தாவரங்களை பயன்படுத்தி செய்யப்படும் கருக்கலைப்பு. இவையே பிரதானமாக பயன்படுத்தப்படும் முறைகள். தாவரங்களை பயன்படுத்தல் பாரம்பரிய முறையாக காணப்படுகின்றது. கருப்பையினுள் கூறிய கருவிகளை உட்செலுத்துவதன் மூலமும் கருக்கலைப்பு செய்யப்படுகின்றது.

இலங்கையில் கருக்கலைப்பு செய்ய சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. சரியான மருத்துவ கண்காணிப்பின்றி செய்யப்படுவதனால் இவ்வாறான சட்டவிரோதமான கருக்கலைப்புகளை நாடுவது ஆபத்தானதாகும்.

சரியான குடும்பத்திட்டமிடல் முறைகளை பாவிப்பதன் மூலம் இவ்வாறான நிலையை தவிர்க்கலாம். குடும்பத்திட்டமிடல் முறையை பாவிக்க தவறிய நேரங்களில் அல்லது ஆணுறை கிழிந்த சந்தர்ப்பங்களில் அவசர கருத்தடை மாத்திரைகளை பாவித்து, திட்டமிடாத கர்ப்பத்தை தவிர்க்கலாம்.